மாணவர் கொத்தணி உருவாகும் அபாயம்!

கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகும் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை உயர்வடைகின்றது எனப்  பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத்தின் உப தலைவர் எஸ்.ஏ.யூ.ரி குலதிலக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், எதிர்வரும் டிசம்பர் மாதமாகும்போது நாட்டில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.