மீஹவத்த கொலையுடன் தொடர்பில் மேலும் இரு பெண்கள் கைது

கைது 4
கைது 4

அங்கொட, மீகஹவத்த பிரதேசத்தில் கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இரு பெண்கள் சந்தேகத்தின் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹம்பாந்தோட்டை, பந்தகிரிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தலைமறைவாகியிருந்த நிலையில் இவர்கள் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இக்கொலைச் சம்பவம் தொடர்பில் முன்னதாக சந்தேகநபர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று கைது செய்யப்பட்ட இருவரும் முல்லேரியா மற்றும் பொரளை ஆகிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.

கடந்த 26ஆம் திகதி காலை இடம்பெற்ற மேற்படி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 42 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்தார்.

உந்துருளியில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியமை சிசிரீவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.

சம்பவத்தில் கொல்லப்பட்டவர், அங்கொட லொக்காவின் உதவியாளர் என்பதும், அவர் திட்டமிட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவர் என்பதும் விசாரணைகளில் தெரியவந்திருந்தது.