வவுனியாவில் இலவச குடிநீர் வழங்குவதற்கான நடமாடும் சேவை

201901050526312599 Action on 490 nonstandard drinking water companies sasy SECVPF
201901050526312599 Action on 490 nonstandard drinking water companies sasy SECVPF

வவுனியாவில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினரால் வீடுகளுக்கான குடி நீர் இணைப்பை வழங்குவதற்கான நடமாடும் சேவையானது நாளை (13) இராசேந்திரகுளம், சூடுவெந்தபிளவு, சாம்பல் தோட்டம் ஆகிய பிரதேசங்களிலும் , எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (14) திருநாவற்குளம், சுந்தரபுரம் (முன் ஒழுங்கை) ஆகிய பிரதேசங்களிலும் இடம்பெறவுள்ளது.

இது தொடர்பில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் வவுனியா அலுவலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மேற்படி பிரதேசங்களுக்கு நீர் வழங்கல் சபையின் உத்தியோத்தகர்கள் வீடு வீடாக வருகை தரவுள்ளனர், எனவே புதிய நீர் இணைப்பு தேவைப்படும் பொது மக்கள் விண்ணப்படிவத்தை பெற்று வழங்கப்படும் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 16.11.2021 செவ்வாய் கிழமை தங்களது இருப்பிடங்களிலேயே அதனை வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அன்றைய தினம் உத்தியோகத்தர்கள் வருகைதந்து மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என அறியத்தரப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் வவுனியா பொறுப்பதிகாரி அலுவலக தொலைபேசி இலக்கமான 0243248025 தொடர்பு கொள்ள முடியும் அச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.