பொகவந்தலாவ – சீனாகலை டி.பி.பிரிவு தோட்டத் தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
டிஜிட்டல் தராசின் மூலம் தேயிலை கொழுந்து அளவிடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த மக்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
டிஜிட்டல் தராசின் மூலம் தேயிலை கொழுந்து அளவிடப்படுவதனால் தங்களுக்கு அதிக நட்டம் ஏற்படுவதாகச் சீனாகலை டி.பி.பிரிவு தோட்ட மக்கள் குறிப்பிடுகின்றனர்.