மதுபான உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் எத்தனோல் இறக்குமதிக்கு இன்று முதல் தடை விதிகபட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் பணிப்புரைக்கு அமைய உடன் அமுலாகும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலும் உள்நாட்டில் எத்தனோல் உற்பத்தி செய்யப்படுவதால், அவற்றை இறக்குமதி செய்வதை இடைநிறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.