இரத்தினபுரி மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள வெதுப்பகம் ஒன்றில் சமையல் எரிவாயு கொள்கலன் வெடித்ததில், பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காமடைந்த பெண் சிகிச்சைகளுக்கான இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த வெடிப்பு சம்பவம் காரணமாக குறித்த வெதுப்பகம் கடுமையாக சேதமடைந்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
அத்துடன், இதனால் மேலும் சிலர் சிறியளவில் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.