ஊவா மாகாணத்தின் பல பகுதிகளில் பனிமூட்டம்

image 58a37e51bc 750x375 1
image 58a37e51bc 750x375 1

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஊவா மாகாணத்தின் பல பகுதிகள் காலை மற்றும் மாலை நேரங்களில் பனிமூட்டமாகக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், பதுளை – பசறை,  மடுல்சிம, எகிரிய, எல்ல, வெலிமடை மற்றும் ஹப்புத்தளை ஆகிய வீதிகளில் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த வீதிகளால் சூழப்பட்ட மலைகள் மண் சரிவுகளுக்கு உள்ளாகின்றன என்றும் பாறைகள் மற்றும் மண் மேடுகளால் அடிக்கடி தடைபடுவதாகவும் காவல்துறையினர் சுட்டிக்காட்டினர்.