யாழ் மாநகர சபை ஆணையாளர் ஜெயசீலனுக்கு கொரோனா

Jaffna Municipal Council

யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் ரி.ஜெயசீலனுக்கு கொரோனா தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதனால் அவர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

மாநகர சபை ஆணையாளருக்கு நோய் அறிகுறிகள் காணப்பட்டதால் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.