யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் ரி.ஜெயசீலனுக்கு கொரோனா தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதனால் அவர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
மாநகர சபை ஆணையாளருக்கு நோய் அறிகுறிகள் காணப்பட்டதால் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.