தமிழகத்திலுள்ள இலங்கை ஏதிலிகளை வரவேற்க அரசாங்கம் தயாராகவுள்ளது!

104159749 douglasdevananda
104159749 douglasdevananda

தமிழகத்தில் உள்ள இலங்கை ஏதிலிகள், அடுத்த ஆண்டு தாம் விரும்பும் சந்தர்ப்பத்தில், இலங்கை தூதரகத்தில் பதிவு செய்து நாடு திரும்பலாமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற பாதீட்டு இரண்டாம் வாசிப்பு மீதான நான்காம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.