அம்பாந்தோட்டை சீமெந்து தொழிற்சாலையில் 45 பேருக்கு தொற்று

coronavirus banner
coronavirus banner

அம்பாந்தோட்டை முதலீட்டு வலயத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் சீமெந்து தொழிற்சாலையில் பணியாற்றி வரும் 45 இந்தியப் பிரஜைகளுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

அம்பந்தோட்டை பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தால் குறித்த சீமெந்து தொழிற்சாலையில் பணியாற்றிவரும் 50 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே 45 இந்தியப் பிரஜைகளுக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளான தொழிலாளர்கள், அம்பாந்தோட்டை பழைய வைத்தியசாலையில் உள்ள கொரோனா சிகிச்சை நிலையத்தில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.