காணாமல் போன குடும்பஸ்தர் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்பு

death
death

காணாமல்போன குடும்பஸ்தர் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்பு!

அம்பாந்தோட்டை, வீரக்கெட்டிய தெலம்புயாய பிரதேசத்தில், காணாமல்போன குடுஸ்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று வீரக்கெட்டிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வீரக்கெட்டிய வேக்கந்தவல கேக்குனாய பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான அலுத் பண்டாரகே தினெத் குமார (வயது – 44) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் கடந்த செவ்வாய்கிழமை கடைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

அதன் பின்பு அவர் வீடு திரும்பாததால் உறவினர்கள் அது தொடர்பில் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளதுடன் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலத்தில் வெட்டுக்காயங்கள் பல காணப்படுகின்றன

குறித்த நபர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் தெரிவிக்கும்காவல்துறையினர் , மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.