மீரிகம நெடுஞ்சாலையை திறந்து வைக்க நடவடிக்கை

highway
highway

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருணாகல் வரையான வீதி எதிர்வரும் 28ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமையின் கீழ் இந்த வீதியைத் திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

மீரிகமவிலிருந்து குருணாகல் வரையிலான வீதி 5 பரிமாற்றங்களை உள்ளடக்கியது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் நான்கு கட்டங்களாக மேற்கொள்ளப்படவுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.