வடக்கின் பல இடங்களில் மாவீரர் நினைவு தின நிகழ்வுகளை நடத்த நீதிமன்றங்கள் தடை

vilakam
vilakam

மாவீரர் வார நிகழ்வுகளை நடத்துவதற்கு யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களின், சில காவல்துறை நிலையங்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய, நீதிமன்றங்கள் தடை உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் 51 பேருக்கு, மாவீரர் நினைவு தின நிகழ்வுகளை நடத்துவதற்கு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் நேற்று(19) தடை உத்தரவு பிறப்பித்தது.

இதேவேளை, கோப்பாய் மற்றும் யாழ்ப்பாண காவல்துறை அதிகார பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் மாவீரர் நினைவு தின நிகழ்வுகளை நடத்துவதற்கு நீதிமன்றம் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

முன்னதாக முல்லைத்தீவு, முள்ளியவளை மற்றும் வவுனியா காவல்துறை பிரிவுகளிலும், சிலருக்கு மாவீரர் தின நிகழ்வுகளை நடத்த நீதிமன்றங்கள் தடை உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.