கிளிநொச்சி மாவட்ட சமூர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட அதிகாரிகளுடனான சந்திப்பொன்று இன்று .இடம்பெற்றது. அமைச்சரும், கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திகுழு இணை தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தலமையில் குறித்த கலந்துரையாடல் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றது.
இதன்போது சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள், அபிவிருத்திகள் உள்ளிட்டவற்றின் முன்னேற்றங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இதில் அமைச்சர், சமுர்த்தி உதவி ஆணையாளர், உதவி பிரதேச செயலாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்