5 கிராம் கெரோயினுடன் இளைஞர் கைது!

arrest with drug heroin
arrest with drug heroin

வவுனியா ஓமந்தை சோதனை சாவடியில் 5 கிராம் கெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞர் போதை பொருளினை உடமையில் வைத்திருப்பதாக இராணுவம் மற்றும் காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஓமந்தை சோதனை சாவடியில் வழிமறிக்கப்பட்டு சோதனைக்குள்ளாக்கப்பட்டார்.

இதன்போது அவரது உடமையில் 5 கிராம் கெரோயின் போதைப்பொருள் வைத்திருந்தமை கண்டறியப்பட்டது.
குறித்த நபர் கைது செய்யப்பட்டு ஓமந்தை காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா நீதிமன்றில் ஆயர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஓமந்தை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.