அரச தீர்மானங்கள் தொடர்பில் ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு

gota5
gota5

அரச நிறுவனங்களில் கொண்டுவரப்படுகின்ற தீர்மானங்கள் தொடர்பில் அனைத்து நிறுவனங்களில் பணியாறறும் அனைத்து ஊழியர்களுக்கும் அறிவிக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி உட்பட அமைச்சரவையில் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் தொடர்பில் உயர் மட்ட அதிகாரிகள் அறிந்திருந்த போதிலும் சாதாரண அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அறியாமல் உள்ளனர்.

எனவே அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் அரச நிறுவனங்களின் தீர்மானங்கள் தொடர்பில் உயர் அதிகாரிகள் போன்று சாதாரண அதிகாரிகள், ஊழியர்கள் அனைவருக்கும் கட்டாயம் அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அரச சேவையை அதிகரித்து, ஊழல் மோசடிகளை தடுப்பதற்கு உயர் அதிகாரிகள் போன்று சாதாரண ஊழியர்களும் சரியான விழிப்புணர்வைக் கொண்டிருக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது,