2022 ஆம் ஆண்டுக்கான பாதீட்டுக்கு எக்காரணம் கொண்டும், ஆதரவாக வாக்களிக்கப் போவதில்லையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் தீர்மானித்துள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையில், கட்சியின் தலைமையகமான தாருசலாமில் உயர்பீட கூட்டம் இடம்பெற்றது.
இதன்போதே, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.