முல்லைத்தீவில் கொரோனாவால் மேலும் இருவர் பலி

118888870 coronagettyimages 1226314512 2
118888870 coronagettyimages 1226314512 2

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 44 அகவையுடை மாறாஇலுப்பை நெடுங்கேணியினை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் 20.11.21 அன்று உயிரிழந்துள்ளார்.

சிறுநீராக நோயினால் பாதிக்கப்பட்ட இவர் கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை நேற்று முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த கூழாமுறிப்பு பகுதியைச் சேர்ந்த 78 வயதுடைய முருகன் கோபால் என்பவரும் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்