வவுனியா பழைய பேருந்து நிலையப்பகுதியில் இன்று காலை முதல் முககவசம் அணியாமல் வீதிகளில் நடமாடுபவர்களுக்கு எதிராக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர் .
இன்று (22) காலை முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்நடவடிக்கையின்போது முககவசம் அணியாமல் வீதிகளில் நடமாடும் பலருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதுடன் அவர்களுக்கு முககவசம் அணிவித்து அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து செல்கின்றனர் .
இவ்வாறு நகரில் பல்வேறு நடவடிக்கைகளை காவல்துறையினர் இன்று பழைய பேருந்து நிலையத்தில் மேற்கொண்டு வருகின்றனர் .