மின்சாரசபை பல பில்லியனில் நஷ்டத்தை சந்திக்கும்-மஹிந்த அமரவீர

index1 415x260
index1 415x260

இலங்கை மின்சார சபை இந்த ஆண்டு 120 பில்லியன் ரூபாவரை நஷ்டத்தை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி, சக்திவலு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த அரசாங்கம் 2017 ஆம் ஆண்டு முதல் மின்சாரம் தொடர்பான எந்தவொரு திட்டத்தையும் முறையாக வகுக்காத காரணத்தினால் கடந்த ஆண்டு இலங்கை மின்சார சபைக்கு 85 பில்லியன் ரூபா இழப்பு நேர்ந்ததாகவும் இந்த ஆண்டு 120 பில்லியன் வரை நஷ்டத்தை சந்திக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

மேலும் இலங்கை மின்சார சபையை நஷ்டத்திலிருந்து மீட்கும் முயற்சியில் அரசாங்கம் புதிய திட்டங்களை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.