இலங்கை – ரஷ்யாவுக்கு இடையிலான நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பம்

Flight2
Flight2

இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான நேரடி விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் வகையில் ரஷ்ய எரோஃப்ளோட் விமான சேவையின் முதலாவது விமானம் 240 பயணிகளுடன் நேற்று(21) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

வாராந்தம் வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இரண்டு தடவைகள் இந்த விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதனை வாராந்தம் 5 சேவைகளாக அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான விமான சேவையை முன்னெடுக்கும் பழமையான விமான சேவைகளில் ஒன்றாக ஏரோஃப்ளோட் திகழ்கின்றது.

இந்த விமான சேவை 1964ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கான விமான சேவையை முன்னெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.