நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ விரைவில் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அலுவலகத்தில் இன்று(22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நிதி அமைச்சராகப் பதவியேற்றதன் பின்னர் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகப்பூர்வ விஜயம் இதுவாகும்.