யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நிகழ்வுக்கு தடையுத்தரவு வழங்கிவைப்பு!

university of jaffna
university of jaffna

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதிக்கக் கோரி கோப்பாய் காவல்துறையினரினால் முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை (19) அனுமதியளித்துள்ள நிலையில் அவர்களுக்கான நீதிமன்ற தடையுத்தரவு இன்று அவர்களிடம் வழங்கிவைக்கப்பட்டது. பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர், செயலாளர் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கும் தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி நீதிமன்ற தடையுத்தரவில் நவம்பர் 21ம் திகதி தொடக்கம் நவம்பர் 28ம் திகதி வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் இறந்த நபர்களை நினைவு கூறுகின்ற மாவீரர் நாள் நிகழ்வினை தற்போது நாட்டில் காணப்படும் கொரோனாத் தொற்றுப் பரவலை கவனத்திற் கொண்டும் இந்நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட பொது இடத்தில்,பொது எண்ணத்துடன் பொதுமக்களை ஒன்று கூட்டியோ அல்லது தனிநபர் மூலமோ 15ம் இலக்க குற்றவியல் மாவீரர் நாள் நிகழ்வுகளை நடாத்துவதற்கு 1979ம் ஆண்டின் நடவடிமுறைச் சட்டக்கோவையின் பிரிவு 106(1) இன் கீழ் மன்றுக்குள்ள அதிகாரத்தின் பிரகாரம் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சூழலில் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படலாம் என்பதற்காக பல்கலைக்கழக சூழலில் இராணுவத்தினரும் காவல்துறையினரும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.