பீடைகொல்லி பதிவாளர் பதவியில் இருந்து ஜே.ஏ.சுமித் நீக்கம்

111
111

பீடைகொல்லி பதிவாளர் உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு விவசாயத்துறை அமைச்சின் செயலாளர் ஜயசூரிய உடுகும்புர தெரிவித்துள்ளார்.

7 வருடங்களாக தடை செய்யப்பட்டிருந்த 5 பீடைக்கொல்லி வகைகளுக்கான தடையை நீக்கியமை தொடர்பில் அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

அதனடிப்படையில் பீடைகொல்லி பதிவாளரினால் 2021.11.01 வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை செயலிழக்க செய்வதுடன் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.