கெளதாரி முனை, கல்முனை கடலில் ஆணொருவரின் சடலம்

IMG 10a3d9a1ce2b5c76b1b29a7a8b3ed44e V
IMG 10a3d9a1ce2b5c76b1b29a7a8b3ed44e V

பூநகரி காவற்துறை பிரிவிற்குட்பட்ட கெளதாரி முனை கல்முனை கடலில் இனந்தெரியாத நபர் ஒருவரின் சடலம்  இனங்காணப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி காவற்துறை பிரிவிற்குட்பட்ட கெளதாரி முனை கல்முனை கடல் பகுதியில் இவ்வாறு இன்று (23.11.2021 காலை சடலம் ஒன்று கிடப்பதாக பூநகரி காவற்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.ச
ம்பவ இடத்திற்கு விரைந்த காவற்துறையினர் சடலத்தை பார்வையிட்டதுடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த சடலம் ஆணொருவரினது என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.  மேலதிக விசாரனைகளை பூநகரி காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.