மாவீரர் தின நிகழ்வுகளுக்குத் தடை விதிக்கக்கோரிய மனு நீதிமன்றினால் தள்ளுபடி!

camps 7 1
camps 7 1

மாவீரர் தின நிகழ்வுகளுக்குத் தடை விதிக்கக்கோரிய மனுவை ஊர்காவற்துறை நீதிமன்றம் இன்று (23) தள்ளுபடி செய்துள்ளது.

ஊர்காவற்துறை மற்றும் நெடுந்தீவு காவல்துறையினரால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

ஊர்காவற்துறை காவல்துறையினரால் 5 பேருக்கு எதிராகவும், நெடுந்தீவு காவல்துறையினரால் ஒருவருக்கு எதிராகவும் மாவீரர் தினத்தை நடத்த தடை விதிக்குமாறு கோரி, மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் குறித்த மனுவை விசாரித்த ஊர்காவற்துறை நீதிவான் அதனைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.