புலதிசி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் புகையிரத சேவையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் 2019.09.11 அன்று அதிகாரபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
புகையிரத சேவைக்கு புதிதாக இணைக்கப்பட்டுள்ள புலதிசி நகர் சேவை கடுகதி புகையிரதம் எஸ் 13 சார்ந்த அதிநவீன சொகுசு புகையிரதமாகும்.
ஜனாபதி அவர்கள் புலதிசி புகையிரதத்தில் கோட்டையிலிருந்து மருதானை வரை பயணம் செய்தார். மருதானைக்குச் சென்ற ஜனாதிபதி மருதானை ரயில் நிலையத்தில் உள்ள பிரதான கட்டுப்பாட்டு அறையினை ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வில் போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க, இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சந்து மற்றும் பலர் கலந்துகொண்டனர்.