முல்லைத்தீவில் நீர்த்தாங்கி புனரமைப்பதற்காக அமைக்கப்பட்ட ஏணி சரிந்து விழுந்தது

received 564074671448945
received 564074671448945

முல்லைத்தீவு மாவட்டத்தின்  கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட  ஹிச்சிராபுரம் பகுதியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினரால்  பாரிய நீர்த்தாங்கி ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது இந்த நீர்த்தாங்கி அமைக்கும் பணிக்காக பொருத்தப்பட்ட ஏணி சரிந்து விழுந்த நிலையில் உள்ளக வீதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு உடைமைகள் பல சேதமடைந்த நிலையில் தெய்வாதீனமாக உயிர் சேதங்கள் காயங்கள் எவையும் ஏற்படவில்லை

received 437630061040686

முல்லைத்தீவு மாவட்டத்தில் சீரற்ற காலநிலை நிலவிவரும் நிலையில் வீசிய காற்று காரணமாக நீர்த்தாங்கி அமைக்கும் பணிக்காக பொருத்தப்பட்ட ஏணி சரிந்து விழுந்த நிலையில் அருகில் இருந்த காணி உரிமையாளர்களின் வேலிகள் சேதமாக்கப்பட்டுள்ளதோடு உள்ளக வீதிகளின் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு மின்னிணைப்புக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது

received 653177479398019

உடனடியாக குறித்த இடத்துக்கு வருகை தந்த   தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் குறித்த ஒப்பந்த தாரர்கள் ஊடாக பாதிப்புக்களுக்கான இழப்பீடுகளை வழங்குவதாக தெரிவித்துள்ளனர்

received 613795143141603

இந்நிலையில் காவற்துறையினர் இராணுவத்தினர் உள்ளிட்டவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து குறித்த நிலைமைகளை பார்வையிட்டுள்ளதோடு மின்சார சபையினர் வருகை தந்து குறித்த பகுதிக்கான  மின் இணைப்பை துண்டித்து குறித்த பாகங்களை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்படுகிறது