நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை மேலும் தொடரும்!

Rain2
Rain2

நாட்டில் நிலவும் கடும் மழையுடனான வானிலை எதிர்வரும் சில நாட்களுக்குத் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதற்கமைய, வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் நாளை மழை பெய்யக்கூடும் என அந்தத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே மழைபெய்கின்ற சந்தர்ப்பங்களில் காற்றின் வேகமானது சற்று அதிகரித்து வீசக்கூடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நிலவும் சீரற்ற வானிலை காரணமாகக் கொழும்பு, களுத்துறை, கண்டி, குருணாகல், மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நாளை பிற்பகல் 3 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.