யுவதி உட்பட நால்வர் ஹெரோயினுடன் சிக்கினர்!

arrest with drug heroin
arrest with drug heroin

போதைப்பொருள் சுற்றிவளைப்புக்களின்போது யுவதி ஒருவர் உட்பட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

மிரிஹான காவல்துறை பிரிவுக்குட்பட்ட நுகேகொட நகரில் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது 05 கிராம் 160 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 45 வயதுடைய மீகொட பகுதியைச் சேர்ந்நத நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை காவல்துறை பிரிவில் 05 கிராம் 120 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 29 வயதுடைய பாணந்துறை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, பாணந்துறை வடக்கு காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் 26 வயதுடைய யுவதி ஒருவர் 04 கிராம் 260 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முகத்துவாரம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஹேனமுல்லைப் பகுதியில் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது 02 கிராம் 710 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 57 வயதுடைய கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர்கள் தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.