குறைந்த வருமானம் பெரும் 10 குடும்பங்களுக்கான வீடுகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது

duminda silva
duminda silva

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் ‘உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்’ வேலைத்திட்டத்தின் கீழ் கொலன்னாவை தொகுதியில் உள்ள குறைந்த வருமானம் பெரும் 10 குடும்பங்களுக்கான வீடுகளை அமைப்பதற்கான அடிக்கல் நேற்று நாட்டப்பட்டது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வாவினால் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது அந்தப் பகுதி மக்கள் முகங்கொடுத்துள்ள வெள்ள நீர்ப்பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.