மகளிடம் சேட்டை விட்டவரின் காதை அறுத்த தந்தை

1638179035 Crime 2
1638179035 Crime 2

மகளிடம் சேட்டை விட்டவரின் காதை தந்தை ஒருவர் அறுத்த சம்பவம் பதிவாகியுள்ளது.

கிளிநொச்சி தருமபுரம் காவற்துறை பிரிவுக்குற்பட்ட தருமபுரம் பகுதியில் நேற்றைய தினம் (28) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டில் உறவினர்கள் இல்லாத போது 12 வயது மதிக்கத்தக்க மகளிடம் சேட்டை புரிந்தவரின் காது அறுக்கப்பட்டுள்ளதுடன், கை மற்றும் கால் போன்ற இடங்களில் பலமாக வெட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் காயமடைந்த நபர் தருமபுரம் வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை தருமபுரம் காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

அத்துடன் வெட்டப்பட்ட வாள் காவற்துறையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடரபாக தருமபுரம் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்