நாயாறு கடற்பரப்பில் கவிழ்ந்த கடற்படை படகு!

DSC08790
DSC08790

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு காவல்துறை பிரிவுக்குட்ப்பட்ட நாயாறு கடற்பரப்பில் கவிழ்ந்த கடற்படை படகு சேதமடைந்துள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாயாறு கடற்படை முகாமில் இருந்து கடலுக்கு சென்ற குறித்த கடற்படை படகு இன்று பிற்பகல் ஒரு மணியளவில்  கடற்சீற்றம் காரணமாக கவிழ்ந்துள்ளது.  

சட்டவிரோத மீன்பிடி படகுகளை கண்காணிக்கவென கடலுக்கு சென்ற குறித்த கடற்படை படகு கடற்சீற்றம் காரணமாக கவிழ்ந்துள்ளது இந்த படகில் மூன்று கடற்படையினர் பயணம் செய்த நிலையில் படகு கவிழ்ந்ததும் ஒருவர் நீந்தி கரைசேர்ந்துள்ளதோடு மற்றய இருவரும் வேறொரு படகொன்றின்மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த கவிழ்ந்த படகு கடற்படையினர் மற்றும் கிராம மீனவர்களின் ஒத்துழைப்புடன் கரைக்கு கொண்டுவர முயற்சி செய்யப்பட்ட போதும் கடற்படை படகு சிதைந்து சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.