11 இளைஞர்களை கடத்திச் சென்று காணாமல் ஆக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள லெப்டினன் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாரச்சிக்கு அடைக்கலம் வழங்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன உள்ளிட்ட 3 பேருக்கு எதிரான வழக்கு விசாரணை பிற்போடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று கொழும்பு கோட்டை நீதிவான் பிரியன்த லியனகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, குறித்த வழக்கு விசாரணை அடுத்த வருடம் மே மாதம் 11 ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளது.
கடற்படையின் முன்னாள் தளபதி அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்னவிற்கு மேலதிகமாக கடற்படையின் முன்னாள் அதிகாரி சந்தன பிரசாத் ஹெட்டியாரச்சி, வர்த்தகர் லக்சிறி கலகமகே ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.