நாடாளுமன்றில் நேற்றும், இன்றும் அமைதியின்மை ஏற்பட்டதால் எதிர்க்கட்சியின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும் வரை மீள நாடாளுமன்றிற்கு வரப்போவதில்லை என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பேசிய எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷமன் கிரியெல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சபையிலிருந்து வௌிநடப்பு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.