புதுக்குடியிருப்பில் சூட்சுமமான முறையில் கசிப்பினை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது

IMG 20211204 WA0029
IMG 20211204 WA0029

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவற்துறை பிரிவுக்குட்பட்ட மல்லிகைத்தீவு கிராம அலுவலர் பிரிவில் கசிப்பு வியாபாரம் அதிகரித்துள்ளதோடு குடும்ப வன்முறைகளாலும் பலர் பாதிக்கப்படுவதாகவும் கசிப்பு விற்பனை மேற்கொண்டுவரும் நபர்கள் சிலர் தொடர்பிலும் மக்கள் கிராம அலுவலரிடம் முறையிட்டுள்ளனர்

IMG 20211204 212441

இந்நிலையில் மக்களின் முறைப்பாட்டுக்கமைய காவற்துறையினரின் உதவியுடன் மக்களால் அடையாளப்படுத்தப்பட்ட குறித்த இடத்துக்கு சென்று இரண்டு காணிகளுக்குள் இரகசியமாக புதைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கான் கசிப்புக்களுடன் இரண்டு வீட்டு உரிமையாளர்கள் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை   புதுக்குடியிருப்பு காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்