நாட்டில் ஏற்படும் மின்துண்டிப்பை கட்டுப்படுத்த மின்சார பொறியியலாளர்கள் முன்வைத்துள்ள யோசனை

pawer cut
pawer cut

நாட்டில் மின்சார துண்டிப்பை கட்டுப்படுத்துவதற்காக குறைந்த செலவில் மின்னுற்பத்தி நிலையங்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மின்சார பொறியியலாளர்கள் தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் மக்களுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் சிக்கல் நிலவுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த 3 ஆம் திகதி நாடு முழுவதும் மின்சார விநியோகம் தடைப்பட்டது.

இதன்போது நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின், இரண்டு மின்னுற்பத்தி இயந்திரங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து 4 நாட்களுக்கு நாட்டின் சில பாகங்களில், மாலை 6 மணி முதல் இரவு 9.30 வரையிலான காலப்பகுதிக்குள், ஒரு மணிநேரம் மின் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் பணிகள் வழமைக்கு திரும்பும் வரையில், குறித்த நான்கு நாட்களுக்குள் இந்த நடவடிக்கை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டின் முக்கிய மின்னுற்பத்தி நிலையம் ஒன்று செயலிழந்ததால் மக்களுக்கான மின்சாரத்தை விநியோகிப்பதில் சிக்கல் நிலவுவதாக இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட பொறியியலாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.