காட்டு யானை தாக்கி 6 பிள்ளைகளின் தந்தை பலி

dethbody
dethbody

மட்டக்களப்பு பதுளை வீதி தும்பாலஞ்சோலை பகுதியில் நேற்று இரவு காட்டு யானை தாக்கியதில் 6 பிள்ளைகளின் தந்தை ஒருவர் பலியாகியுள்ளார்

கனகன் முருகேசன் எனும் 60 வயது மதிக்கத்தக்க 6 பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு காட்டுயானை தாக்கி உயிரிழந்துள்ளதாக கரடியனாறு காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 யானை தாக்கி உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு உள்ளதுடன் குறித்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது