மட்டு கிரான் ஆற்றில் சட்டவிரோதமாக ஆற்று மணலை கனரக வாகனத்தில் ஏற்றி இருவர் கைது!

kaithu
kaithu

மட்டக்களப்பு வாழைச்சேனை காவற்துறை பிரிவிலுள்ள கிரான் பகுதியிலுள்ள ஆற்றில் சட்டவிரோதமாக ஆற்று மணல் அகழ்ந்து கனரக வாகனத்தில் ஏற்றிய இருவரை இன்று திங்கட்கிழமை (06) அதிகாலையில்  கைது செய்ததுடன் இரண்டு கனரக வாகனங்களை மீட்டுள்ளதாக வாழைச்சேனை காவற்துறையினர் தெரிவித்தனர்.

காவற்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கு அமைய குறித்த பகுதியில் சம்பவதினமான இன்று அதிகாலை காவற்துறையினர் முற்றுகையிட்டனர் இதன் போது கனரக வாகனங்களில் சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றிக் கொண்டிருந்த இருவரை கைது செய்ததுடன் கனரக வாகனத்தை மீட்டனர்

இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.