தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் இந்திய விஜயம் பிற்போடப்பட்டுள்ளதாக அதன் உறுப்பினர் ஒருவர் செய்தி சேவை ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களினால் இந்த விஜயம் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
13ஆம் திருத்தசட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட குழுவினர் இந்த வாரம் இந்தியாவிற்கு செல்லவிருந்தனர்.
இதன்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் அவர்கள் சந்திக்கவிருந்தனர்.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ அண்மையில் இந்தியாவுக்கு சென்றிருந்த நிலையில் இந்த பயணம் இடம்பெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.