ஹட்டன் ஓயாவிலிருந்தும் பெண்ணொருவர் சடலமாக மீட்பு!

DSC 0009 2
DSC 0009 2

ஹட்டன் – ஸ்ட்ரதன் தோட்டம் ப்ருட்ஹில் பகுதியில் ஹட்டன் ஓயாவிலிருந்து இன்று (07) காலை பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பிரதேசவாசிகளிடமிருந்து கிடைத்த தகவலுக்கமைய, சம்பவ இடத்திற்கு விரைந்த ஹட்டன் காவல்துறையினர் குறித்த சடலத்தை மீட்டுள்ளனர்.

உயிரிழந்த பெண் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இப்பெண்ணின் உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறியும் பொருட்டு ஹட்டன் காவல்துறையினர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, டயகம, ஆக்ரோயா ஆற்றிலிருந்து நேற்று மாலை 53 வயதான பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இச்சம்பவம் தொடர்பிலும் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.