வத்தேகம சிறுவர் இல்லத்திலிருந்து தப்பிச்சென்ற 5 சிறுமிகளை தேடி விசாரணை!

Hostel
Hostel

கண்டி வத்தேகம – மீகம்மன பிரதேசத்தில் உள்ள சிறுவர் புனர்வாழ்வு இல்லத்தில் இருந்து தப்பிச் சென்ற ஐந்து சிறுமிகளை தேடி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த சிறுமிகளில் ஒருவர் நாவலப்பிட்டியில் உள்ள அவரது வீட்டில் தங்கியுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த ஐந்து சிறுமிகளும் நேற்று நண்பகல் சிறுவர் இல்லத்திற்கு அருகில் உள்ள பாடசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது தப்பிச் சென்றுள்ளனர்.

அவர்கள் 16 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சிறுமிகள் புஸ்ஸல்லாவ, வத்தேகம மற்றும் உடிஸ்பத்துவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.