காவல்துறைக்கு எதிராக மாற்றுபாலினம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க அனுமதி!

Srilanka Police
Srilanka Police

மாற்றுபாலின சமூகத்தினருக்கு எதிராக காவல்துறையினரால் மேற்கொள்ளப்படும் இடையூறுகள் மற்றும் அவமதிப்புகளை தடுக்கும் வகையில் நீதிப்பேராணை ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அனுமதியளித்துள்ளது.

இந்த மனு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட அடிப்படை பரிசீலணையையடுத்து, சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கனேபொல ஆகியோரடங்கிய நீதிபதிகள் குழாமினால் இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்காக பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை அனுப்புமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.