வடமேல் மாகாண ஆளுநராக வசந்த கரண்ணாகொட?

47b246a1 281148 550x300 crop
47b246a1 281148 550x300 crop

வடமேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் கடற்படை தளபதி, அட்மிரல் ஒஃப் த ஃப்ளீட் வசந்த கரண்ணாகொட நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வட மேல் மாகாண ஆளுநராக பதவி வகித்துவந்த ராஜா கொல்லுரே கொவிட் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்றுமுன்தினம் உயிரிழந்தார்.

இதனையடுத்து, ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்காக ஓய்வுபெற்ற கடற்படை தளபதி வசந்த கரண்ணாகொட நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.