வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது – நிதி அமைச்சர்

Temporarily Holding Vehicles and Other Non Essential Items
Temporarily Holding Vehicles and Other Non Essential Items

2022ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அடுத்த ஆண்டின் இறுதி வரை அரச துறைக்கு ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும், பால்மா இறக்குமதிக்காக நிதி ஒதுக்கீடு செய்ய முடியாது எனவும் நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.