மட்டக்களப்பில் முஸ்லிம் வியாபாரிகள் அச்சம் இன்றி எங்கும் சென்று வியாபாரம் செய்ய முடியும். அவ்வாறு எவரேனும் தடுப்பின் தன்னிடம் முறையிடுமாறு பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பா.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
இன்று மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சில அமைப்புக்கள் முஸ்லிம் வியாபாரிகள் தமிழ் பிரதேசங்களில் வியாபாரம் செய்ய கூடாது என தெரிவிப்பவர்கள் தொடர்பில் தன்னிடம்அறிவிக்குமாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பில் முஸ்லிம் வியாபாரிகள் அச்சம் இன்றி எங்கும் சென்று வியாபாரம் செய்யலாம் அதனை யாரும் தடுத்தால் என்னிடம் முறையிடுங்கள் நான் அதனை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கப்படும் என தெரிவித்தார்.
கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களாக செயற்பட்ட சிலர் தற்போது எமது ஜனாதிபதிக்கு அவப்பெயரை எடுத்துக் கொடுப்பதற்காக திட்டமிட்டு இவ்வாறான செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் இதன் போது குற்றம் சுமத்தியிருந்தார்.