முல்லைத்தீவு மாவட்டத்தில் சேஜய நுண்நிதி நிறுவன கிளை இன்று கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட வைத்திய சாலைக்கு அருகாமையில் இன்று காலை பத்து மணிக்கு குறித்த சேஜய நுண்நிதி நிறுவன கிளை திறந்து வைக்கப்பட்டது.
முல்லைத்தீவு சேஜய நுண் நிதி நிறுவன கிளை முகாமையாளர் யதுர்சன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் சேஜய நுண்நிதி நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பிரின்ஸ்நாயகம் அவர்கள் கலந்துகொண்டு கிளையினை நாடாவை வெட்டி திறந்து வைத்தார்.
நிகழ்வில் சேஜய நுண்நிதி நிறுவனத்தின் வட பிராந்திய முகாமையாளர் கணபதிப்பிள்ளை ஏகலைவன் கரைதுறைப்பற்று பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் சண்முகராஜா கயூரதன் யாழ் போதனா வைத்தியசாலையின் சிரேஸ்ட மருத்துவர் வைத்திய கலாநிதி சண்முகராஜா சேஜய நுண்நிதி நிறுவன கிளிநொச்சி முகாமையாளர் சேஜய நுண்நிதி நிறுவன ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.