அம்பாறை – காரைதீவு பிரதேச சபையின் பாதீடு நிறைவேற்றம்!

ps. office
ps. office

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆளுகைக்கு உட்பட்ட அம்பாறை – காரைதீவு பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான பாதீடு 2 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தவிசாளர் கி.ஜெயசிறிலினால் குறித்த பாதீடு இன்றைய தினம் முன்வைக்கப்பட்டிருந்தது.

12 உறுப்பினர்களை கொண்ட காரைத்தீவு பிரதேச சபையில் 7 உறுப்பினர்கள் பாதீட்டுக்கு ஆதரவாகவும், 5 பேர் எதிர்த்தும் வாக்களித்துள்ளனர்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் இரண்டு உறுப்பினர்கள் மற்றும் சுயேட்சை குழு உறுப்பினர் ஒருவரின் ஆதரவுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு 2022ஆம் ஆண்டுக்கான பாதீட்டை சபையில் நிறைவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.