கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் வெட்டு

water cut
water cut

வார இறுதியில் கொழும்பின் சில பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை (18) இரவு 11.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (19) காலை 8.00 மணி வரை ஒன்பது மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, கொழும்பு 09, 10, 11, 12, 13 மற்றும் 14 ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.