திருக்கோவில் விநாயகபுரத்தில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறல்!

WhatsApp Image 2021 12 16 at 17.53.28
WhatsApp Image 2021 12 16 at 17.53.28

அம்பாறை திருக்கோவில் காவல்துறை பிரிவிலுள்ள விநாயகபுரம் பகுதியில் எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்து சிதறிய சம்பவம் நேற்று வியாழக்கிழமை (16) பகல் இடம்பெற்றுள்ளதாக திருக்கோவில் காவல்துறையினர் தெரிவித்தனர்.

விநாயகபுரம் 4ம் பிரிவு கடற்கரை வீதியிலுள்ள வீடு ஒன்றில் சம்பவதினமான நேற்று பகல் எரிவாயு அடுப்பில் வீட்டின் உரிமையாளரின் மனைவியார் சமையல் செய்து கொண்டிருந்தபோது திடீரென எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியது எவருக்கும் எதுவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.